தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல்?? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!

0

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் தமிழகத்தில் தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதனை குறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபை தேர்தல்:

தமிழகம், புதுவை, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே மாதம் முதல் சட்டசபை காலம் முடிவடைகிறது. எனவே வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இந்த 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த 5 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கி வருகின்றனர். தற்போது தேர்தல் அதிகாரிகளும் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தலை நடத்தப்போவதாக தகவல் வெளியாகின. கடந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரத பாகு கூறுகையில், “தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

3 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் தகவல்!!

மேலும் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு இது வரை பரிந்துரை எதுவும் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, திட்டமிட்டபடி வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி அன்று வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று தேர்தல் அதிகாரி கூறியதால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here