கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருவதை அந்த மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்த நோய் பரவல் காரணமாக மக்கள் கவலை மற்றும் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்:
பறவை காய்ச்சல் என்பது ஒரு விதமான வைரஸ் பரவல் ஆகும். இது பறவைகளை மிக எளிதாக தாக்கக்கூடிய வல்லமை படைத்தது. இது பறவைகளை மட்டும் தாக்காமல் மனிதர்களையும் சில நேரங்களில் தாக்குகிறது. ஆரம்பகட்டத்தில் சாதாரண காய்ச்சல், உடல் வலிகளை கொண்டு தான் இது ஆரம்பிக்கிறது. பின், கடுமையாக மாறி இது ஒருவரை மரணிக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியான இந்த பறவை காய்ச்சல் கேரளா மாநிலத்தில் பரவி வருகின்றது. இந்த பரவல் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இறந்துள்ள வாத்துகளை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளாவின் வனத்துறை அமைச்சர் ராஜு உறுதி செய்துள்ளார்.
துர்காவிடம் வந்து பாரதியை பற்றி விசாரிக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!
தற்போது புதிதாக உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பரவல் கேரளாவில் அதிகளவில் பரவி வருகின்றது. இப்படியான சூழலில் இந்த வைரஸ் பரவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த பரவளில் இருந்து மக்களை காப்பாற்ற கேரளா அரசு தீவிரமான பணிகளில் இறங்கியுள்ளது.