துர்காவிடம் வந்து பாரதியை பற்றி விசாரிக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் எப்படியோ சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா சென்னையில் தான் இருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் லட்சுமியை எப்படி படிக்க வைக்க போகிறோம் என்ற கவலையில் கண்ணம்மா இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல சம்பவங்கள் நடந்து வருகிறது. சௌந்தர்யா கோவிலுக்கு சென்று கண்ணம்மா கிடைத்து விட வேண்டும் என்று வேண்ட சீதா கால் செய்து கண்ணம்மா சென்னையில் இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் சௌந்தர்யாவும் சந்தோஷமடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் வெண்பா ஹேமா பாரதியின் குழந்தை தானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்து கொண்டுள்ளார். ஏற்கனவே வெண்பா பீட்ஸா ஆர்டர் செய்ய கதவை திறந்து பார்த்தால் அங்கு துர்கா. இதனால் மிகவும் ஷாக் ஆகிறார். நீ எதுக்கு இங்க வந்த கத்தி ஊர கூட்டிடுவேன் என்று சொல்ல துர்கா உன்னை கற்பழிச்சேனு சொல்லி எல்லார் முன்னாடியும் தாலி காட்டுவேன் என்று சொல்ல வெண்பா கோவமடைந்து உள்ளே செல்கிறார்.

மேலும் துர்கா கண்ணம்மா பாவம் அவளை எவ்ளோ டார்ச்சர் பண்ண. பாரதி எதோ நல்லவரா இருக்க போய் நீ சொன்ன பொய் எல்லாத்தையும் நம்பாம கண்ணம்மாவை ஏத்துக்கிட்டாரு என்று நடந்த விஷயம் தெரியாமல் பேசுகிறார். வெண்பாவும் துர்காவிற்கு விஷயம் தெரியாத வரைக்கும் நல்லது என்று நினைத்து கொள்கிறார்.

அடுத்து பாரதியை காட்ட ஹேமாவிற்கு தலை சீவி விடுகிறார். ஹேமா ஏற்கனவே யாருக்காவது தலை சீவி இருக்கீங்களா?? என்று கேட்க பாரதிக்கு கண்ணம்மாவுடன் வாழ்ந்த நினைவுகள் வருகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய்விடுகிறார். அப்பொழுது அஞ்சலி அங்கு வர அனாதை குழந்தைக்கு எவளோ சொகுசு வாழ்க்கை என்று நினைத்து கொள்கிறார்.

அடுத்து கண்ணம்மாவை காட்ட துளசி லட்சுமி பற்றி விசாரிக்கிறார். அவரது அம்மாவை பற்றி எதுவும் எதுவும் கேட்க மாட்டாளா?? என்று கேட்கிறார். லட்சுமி இத்தனை நாள் அப்பாவை பற்றி கேட்டதை துளசியிடம் கூறுகிறார். அடுத்து லட்சுமி அம்மாவை ஹாஸ்பிடலுக்கு எப்படியாவது அழைத்து செல்ல வேண்டும் என்று யோசித்து கொண்டுள்ளார்.

மேலும் முதலில் பாரதியை சந்தித்து பேச வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அடுத்து வெண்பாவை மறுபடியும் துர்கா லவ் டார்ச்சர் செய்துகொண்டுள்ளார். வெண்பா என்ன விட்டு போயிடு என்று மிரட்ட ஆனால் துர்கா இல்லை. அப்பொழுது பார்த்து லட்சுமி அந்த பக்கம் வர வெண்பா அதனை பார்த்து விடுகிறார். லட்சுமி அன்னைக்கு பாரதியுடன் இருந்த விஷயத்தை துர்காவிடம் சொல்லி விட்டால் காரியமே கேட்டு விடும் என்று அங்கிருந்து கிளம்புகிறார்.

லட்சுமி துர்காவிடம் கார்டை கொடுத்து விசாரிக்க துர்கா எதுக்கு என்று கேட்கிறார். லக்ஷ்மியும் தன் அம்மா முடியாமல் இருப்பதையும் அவர்களை டாக்டரிடம் காட்ட வேண்டும் என்றும் சொல்ல துர்கா தானே சென்று அங்கு விடுவதாக அழைத்து செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here