#INDvsAUS பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிப்பு – இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க மறுப்பு!!

0

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தங்களது 4 வது டெஸ்ட் போட்டியை வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து விளையாட உள்ளது. தற்போது கொரோனா சூழல் காரணமாக பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிகிறது. இதனை ஏற்க இந்தியா அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி 3 ஒருநாள், 3 டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை பங்கேற்க சென்றுள்ளது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இருந்து கோஹ்லி விலகிய நிலையில் தற்போது ரஹானே இந்தியா அணியை வழிநடத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டாவது போட்டியில் இந்தியா அணி மிக சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி அன்று துவங்குகிறது. இந்நிலையில் தனது தனிமைபடுத்துதலின் கால அவகாசம் முடிந்த நிலையில் இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா இந்தியா அணியுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஹித் சர்மா, ரிஷாப் பாண்ட், சுப்மங் கில், பிரிதிவி ஷா மற்றும் சைனி ஆகிய 5 பேரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக தகவல் வெளியாகியது.

துர்காவிடம் வந்து பாரதியை பற்றி விசாரிக்கும் லட்சுமி – சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா கதைக்களம்!!

தற்போது இதனை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்தியா அணி வீரர்கள் அனைவர்க்கும் இந்த ஐவர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவர்க்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஐவர் 3 வது போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படாது என்று தெரிகிறது. மேலும் 4 வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வைத்து தொடங்கவுள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் மிகவும் கடினமாக விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்கள் விளையாடியதற்கு பின்பு தங்கள் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகின. இதனால் இந்தியா அணி வீரர்கள் பிரிஸ்பேனில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இன்சூரன்ஸ் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது,” நாங்கள் தினமும் பிசிசியிடம் பேசி வருகிறோம். மேலும் பிரிஸ்பேனில் உள்ள கட்டுப்பாடுகள் விதிமுறைகள் அனைத்தையும் நாங்கள் கூறிவருகிறோம். மேலும் அங்கு வீரர்கள் யாரும் வெளிவரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை, காலை சுமார் 8 மணி அளவில் வீரர்கள் மைதானத்திற்கு வரவேண்டும். அதன் பின்பு இரவு 7 மணி வரை மைதானத்தில் வீரர்கள் இருப்பார்கள். அதன் பின்பு தங்களது அறைக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். அறைக்கு செல்லும் போது அவரகள் ஒன்றாக செல்லலாம். மேலும் இதற்கு வீரர்கள் ஒப்புதல் அளித்ததாக கூறப்டுகிறது. திட்டமிட்டபடியே டெஸ்ட் போட்டி நடைபெறும்” என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here