தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலையானது . அடுத்த 5 நாட்களுக்கு (மே 24 முதல் மே 28) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/weather-22-5.jpg)
மேலும் மே 26 முதல் மே 28 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை இயல்பாகவும், இயல்பை விட அதிகமாவும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் இன்று மே 24 முதல் மே 28 ம் தேதி வரை குமரிக்கடல், அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.