தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
தேர்தல் முடிவுக்கு பின் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்ட பணிகளுக்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டதை நாம் அறிவோம். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிதாக 2 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட பல்வேறு சலுகைகளை பெற ரேஷன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் புதிய குடும்ப அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here