இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த முறை மக்களவைத் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திலேயே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன்படி மே மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோடை கால விடுமுறையை நீட்டிக்க ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.