அமெரிக்கா தேர்தலை உலக நடவுக்கு அனைத்தும் எதிர்பார்த்திருக்கும் மத்தியில் பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடுத்த அதிபர் யார்? என்றும் தன்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை என்று கூறி உள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?
அமெரிக்காவின் அடுத்த 46 ஆவது அதிபருக்கான தேர்தல் நவ. 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அத்தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி சார்ந்த டொனால்ட் டிரம்ப்பும், டெமாக்ரடிக் கட்சியை சார்ந்த ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். அடுத்து வெள்ளை மாளிகையை கைப்பற்ற போவது டிரம்ப்பா? இல்லை பைடனா? என்ற கேள்வி அமெரிக்கா மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளிலும் கேள்வி எழுந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அமெரிக்க வேட்பாளர் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற வேண்டும். அதில் இந்த ஆண்டு 10 கோடி வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். தற்போது உள்ள நிலவரப்படி ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
கணவருடன் வாக்களித்த சன்னி லியோன்:
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தற்போது நடந்து வரும் அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான தேர்தல் முடிவை உற்சாகத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். இந்த தேர்தல் முடிவு தனக்கு அதிக எதிர்பார்ப்பை தூண்டுகிறது என்று கூறுகிறார்.இவர் தனது கணவர் டேனியலுடன் சேர்ந்து வாக்களித்த பின் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதில் “சஸ்பென்ஸ் என்னைக் கொல்லும்” என்ற வேடிக்கையான பதிவையும் வெளிட்டுள்ளார். சன்னி லியோன் தனது கணவருடன் வாக்களித்த பின் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.