சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வசனமான ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மு.க ஸ்டாலின்
ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியைக் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதல் கட்ட பிரச்சாரப்பணிகள் முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். அவ்வாறு விருத்தாசலம் பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டும், மனுக்கள் மூலமாக பெற்றும் வருகிறார். விருத்தாசலம் பகுதியில் அவர் பேசியபோது, தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் பகுதி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
#INDvsENG 2வது டெஸ்டில் ரோஹித் 150, ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்திய அணி!!
‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ என்பதுபோல தான், நாங்கள் சொல்லியதையெல்லாம் முதல்வர் செய்து வருகிறார். விவசாயக்கடனை ரத்து செய்யக்கூடாது என கூறி நீதிமன்றம் சென்ற முதல்வர் தற்போது வாய்க்கு வந்தபடி ஏதேதோ சொல்லுகிறார் என குற்றம் சாட்டினார். மேலும் கொரோனா காலங்களில் மக்களுக்கு உதவி செய்த கட்சி என்றால் அது திமுக தான். அதிமுக அரசு கொரோனா காலங்களில் அனைத்து டெண்டர்களிலும் அதிக ஊழல் செய்துள்ளது’ எனவும் கூறினார்.