#INDvsENG 2வது டெஸ்டில் ரோஹித் 150, ரஹானே அரைசதம் – வலுவான நிலையில் இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் ரோஹித் மற்றும் ரஹானே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு ரசிகர்கள் இந்த போட்டியை மைதானத்தில் வைத்து பார்த்து ரசிக்கிறார்கள். இந்தியா அணி சார்பாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். கில் 0 அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதன்பின்பு புஜாரா களம் வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இருந்தும் 21 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா தனது ஆட்டத்தை இழந்தார். அதன்பின்பு கரகோசத்திற்கு இடையே கேப்டன் கோஹ்லி களம் வந்தார். ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின்பு ரோஹித் மற்றும் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் போட்டியில் சொதப்பிய இந்த இரு வீரர்களும் இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வடிவேலு – சோகத்தில் ரசிகர்கள்!!

மேலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவரை தொடர்ந்து ரஹானே தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து அணி மேற்கொண்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 150 ரன்களை அடித்து அசத்தினார். தற்போது களத்தில் ரோஹித் மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 233/3

ரோஹித் – 153*
ரஹானே – 59*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here