உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன வடிவேலு – சோகத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை பெற்றவர் நகைசுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சமீப காலமாக அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லலை. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். வடிவேலு அப்புகைப்படத்தில் உடல் மெலிந்து மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.

வைகை புயல் வடிவேலு:

தமிழ் சினிமாவில் நகைசுவை கதாபாத்திரங்களில் தோன்றி மக்கள் மனதில் நின்ற ஜாம்பவான்களான பாலையா, நாகேஷ், கவுண்டமணி வரிசையில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றவர் நடிகர் வடிவேலு. மதுரையை சேர்ந்த, வைகை புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், சில காரணங்களால் தற்போது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இருந்த போதிலும் டிவியில் ஒளிபரப்பாகும் நகைசுவை நிகழ்ச்சிகளில் இவரது திரைப்பட காட்சிகள் இன்று வரை தவறாமல் ஒளிபரப்பப்பட்டு கொண்டே இருக்கின்றது. மேலும் சமூக வலைத்தளங்களில் இவரது படக்கட்சிகளையும் வசனங்களையும் வைத்து வெளியிடப்படும் மீம்ஸ்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

காதலே..காதலே தனி பெரும் துணையே – ஒருவரின் தியாகத்தால் கொண்டப்படும் “காதலர்” தினம்!!

இப்படியாக எப்போதும் டிரெண்டிங்கிலேயே இருக்கும் வடிவேலுவின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பொது நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வடிவேலு, சக நடிகர்களான மனோபாலா , சந்தான பாரதி மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட அப்புகைப்படத்தில் உடல் இளைத்து மிகவும் சோர்வாக காணப்படுகிறார். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here