கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

0

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூன்று முன்களபணியாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட மூவருக்கு மயக்கம்

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16 ம் தேதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதில் முதல்கட்டமாக, கொரோனா முன் களப்பணியாளார்களுக்கும், சுகாதாரத்துறையில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 2,11,484 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி பணியில், தடுப்பூசி போட்டு கொண்ட சிலருக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட சில பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

போஸ்கோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு – புஷ்பா கனெடிவாலா மேலும் 1 வருடம் பதவி நீட்டிப்பு!!

தொடர்ந்து ஆந்திராவில் ஒருவரும் உத்திர பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு தடுப்பூசியினால் ஏற்படவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட 3,126 முன் களப்பணியாளார்களுக்கு மட்டும் மீண்டுமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தஞ்சையில் 220 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் மூவரையும் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்து சிகிச்சையில் இருக்கும் மூவரிடத்தில் கல்லூரி முதல்வர் நலம் விசாரித்துள்ளார். மருத்துவக்கல்லூரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக மருந்து செலுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here