போஸ்கோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு – புஷ்பா கனெடிவாலா மேலும் 1 வருடம் பதவி நீட்டிப்பு!!

0

போக்ஸோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பா கனெடிவாலாவுக்கு மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதாக  மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

சர்ச்சை தீர்ப்பு:

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிவருபவர் புஷ்பா கனெடிவாலா. இவர் சமீபத்தில் ஒரு பெண்குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் ஒருவரை “ஆடைக்கு மேலே தீண்டுவது பாலியல் குற்றமாகாது” என்று கூறி விடுதலை செய்தார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அவர் இது போலவே மேலும் இரு வழக்குகளில் குற்றவாளிகளி போக்ஸோ சட்டத்திலிருந்து விடுவித்துளார். இது பல தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலின் முன்னாள் காதலி செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

இதை தொடர்ந்து இவருக்கு நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்றத்தின் கொலோஜியம் திரும்ப பெற்றது. இந்நிலையில் இவர் கூடுதல் நீதிபதியாகவே மேலும் ஒரு வருடகாலம் தொடர்வார் என மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தீர்ப்பினை வழங்கிய நீதிபதிக்கு மேலும் ஒரு வருட காலம் பதவி நீட்டிப்பு வழங்கும் இந்த அறிவிப்பு மக்களிடையே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here