டிக் டாக்கில் கவர்ச்சியான வீடியோவை பதிவு செய்து அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இலக்கியா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கியுள்ளார்.
டிக் டாக் இலக்கியா:
டிக் டாக் மூலம் பிரபலம் ஆனவர் தான் இலக்கியா. இவர் டிக் டாக் இருந்த காலத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தவர். அதில் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் கவர்ச்சியான வீடியோவாக தான் இருக்கும். தனது கவர்ச்சி மூலம் அவர் பல ரசிகர்களை டிக் டாக்கில் பிடித்தார். மேலும் நாளடைவில் இலக்கியா பிரபலமும் ஆனார். தற்போது அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். அதைப்பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆல்பைன் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை இயக்குனர் துறைராஜ் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக அருண்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக இலக்கியா நடித்துள்ளார். இவர்களுடன் தங்கதுரை, நெல்லை சிவா மற்றும் கொட்டாச்சி போன்றோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு துரைராஜன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இலக்கியாவின் நடிப்பு பற்றி இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
காதலே..காதலே தனி பெரும் துணையே – ஒருவரின் தியாகத்தால் கொண்டப்படும் “காதலர்” தினம்!!
அவர் கூறியதாவது, தொடக்கத்தில் படத்தில் நடிப்பதற்கு இலக்கியா சிரமப்பட்டார். அதன்பிறகு போக போக நான் கூறுவதை அப்படியே நடித்து விட்டு வந்தார். மேலும் இது அவருக்கு புது அனுபவமாக இருந்தது என்று இலக்கியா கூறினாள், இந்த படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் த்ரில்லர் படமாக இருக்குமாம். மேலும் இந்த படத்தில் இலக்கியா அளவான கவர்ச்சியில் நடித்துள்ளார் என்று தெரிவித்தார் இயக்குனர்.