பாரதியும் கண்ணம்மாவும் பிரித்திருப்பதை தெரிந்துகொள்ளும் துர்கா – அதிர்ச்சியில் வெண்பா!!

0

டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் வெண்பா பேசிக்கொண்டிருக்க அதனை விடும் துர்கா கண்ணம்மாவும் பாரதியும் சேராமல் இருப்பதை தெரிந்துகொண்டு கோவமடைகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா உயிருக்கு போராடிய நிலையில் பாரதி அவரை எப்படியோ காப்பாற்றினார். மேலும் லட்சுமியும் கண்ணம்மாவை பார்க்க அங்கு வர கண்ணம்மா கண் முழிக்கிறார். துளசி கண்ணம்மாவை எப்படியோ சமாளித்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவின் நினைப்பிலேயே அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் ஹேமா சௌந்தர்யாவிடம் தன் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் சமையல் ஆண்ட்டியை சமைக்க சொல்ல்லாம் என்று கேட்க சௌந்தர்யாவும் யோசித்து விட்டு சரி என்று வாக்களிக்கிறார்.

அடுத்ததாக கண்ணம்மாவை காட்ட ஆட்டோ டிரைவர் பற்றி பேசிகொண்டுள்ளனர். அவரது குழந்தைகள் அவருக்காக காத்துக்கொண்டிருக்கும் என்றும் சொல்கின்றனர். அப்பொழுது லட்சுமிக்கு அப்பாவின் நியாபகம் வருகிறது. தனது அப்பா எங்கே இருக்கிறார்.

காதலே..காதலே தனி பெரும் துணையே – ஒருவரின் தியாகத்தால் கொண்டப்படும் “காதலர்” தினம்!!

என்னை தேடி ஏன் வரவில்லை என்றும் கேட்கிறார். தனது அப்பா வேறு குடும்பத்துடன் இருக்கிறாரா?? என்று கேட்க கண்ணம்மா உங்க அப்பா ரொம்ப நல்லவர். 4 பேரு மதிக்கிற அளவுக்கு இருக்குறவரு என்று சொல்ல லட்சுமி சமாதானம் ஆகிறார். அடுத்ததாக பாரதி வெண்பாவை தேடி செல்கிறார்.

கண்ணம்மாவை பற்றி சொல்கிறார். இதனால் வெண்பா அதிர்ச்சியாகிறார். பாரதி தான் ஹேமாவை அழைத்துக்கொண்டு ஊரை விட்டே செல்ல போவதாக சொல்கிறார். இத்தனை நாள் அந்த கண்ணம்மாவின் தொல்லை இல்லாமல் இருந்தது. தற்போது மறுபடியும் ஆரம்பித்து விட்டது என்று கூற இவை அனைத்தையும் துர்கா கேட்டு விடுகிறார்.

அப்போ கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து இல்லையா?? அப்போ அன்னைக்கு நம்ம பார்த்த அந்த குழந்தை யாரு என்று குழப்பமடைகிறார். அதோடு வெண்பாவிடம் போய் கேட்க அமாம் என்று கூறி துர்காவை துரத்தி விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here