தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞராக வலம் வந்தவர் தான் நடிகர் போண்டாமணி. இவர் நடிகர் வடிவேலுவின் காம்பினேஷனில் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 23) நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். இவரின் இறுதி அஞ்சலிக்கு பல நடிகர், நடிகைகள் பங்கேற்றாலும் வடிவேலு வராதது கேள்வியை உண்டாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வடிவேலு தொடர்பாக நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘வடிவேலு யார் செத்தாலும் போக மாட்டார்’. ‘விவேக், மனோபாலா,நெல்லை சிவா, அல்வா வாசு, கிருஷ்ணமூர்த்தி என யார் இறந்ததற்கும் வடிவேலு செல்லவில்லை’. ‘அவர் போகும்போது யாரு போக போறான்னு தெரியல’. ‘வடிவேலு கல்யாணம், இறப்பு என எதுக்குமே போக மாட்டார்’ என கோபத்துடன் தனது கருத்தை முடித்துள்ளார்.
சோன முத்தா போச்சா.., வாடகை தர மறுத்த டாஸ்மாக் உரிமையாளர்.., கடையை பூட்டிய சம்பவம்!!!