பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் குழு கூறியுள்ளது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த 14 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூச்சு விட சிரமமாக இருந்ததால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் சிலையை உடைத்த பெண் – பக்ரைனில் பரபரப்பு..!
அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கடந்த சில நாட்களில் நன்றாகவும் மீண்டும் கவலைக்கிடமாகவும் இருந்து வருகிறது. இது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மகன் கூறியதாவது:
அவரது மகன் எஸ்.பி. சரண் அவரது தந்தை உடல் நிலை நன்றாக உள்ளதாக தான் தெரிவித்து இருந்தார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், அவரை பரிசோதிக்கும் மருத்துவ குழு அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவரை அவசர பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.