கொரோனாவால் பாதிக்கப்பட்டதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.பி
பின்னணி பாடகரான எஸ்.பி.பி கொரோனா பதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மனதில் வேதனையை அளித்துள்ளது. மேலும் தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி.பி யின் உடல்நிலை பற்றி அவரது மகன் சரண் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் என்றும் அவரின் கொரோனா பரிசோதனை நெகடிவ் என வந்துள்ளதாக வதந்தி பரவியுள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும் இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எஸ்.பி.பி மகன் சரண் கூறியுள்ளார்.
இது பற்றி வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது, எனது தந்தை எஸ். பி.பி தொடர்ந்து ஐசியூவில் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை எங்களது நிபுணர் மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.