விழா அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது பெண்கள் அனைவரும் விரும்புவது தான் அழகாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் வெளியில் செல்லும்போது சுற்றுசூழலில் ஏற்படும் மாசுவால் சற்று நேரத்திலேயே முகம் பொலிவினை இழக்கிறது. முகப்பொலிவினை இழக்காமல் இருக்க சில வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
முகப்பொலிவு
நாம் எந்த விழா அல்லது வெளியில் செல்லும்போது 1 வாரத்திற்கு முன்பாகவே நாம் தேவையவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நாட்கள் அல்லது 1 வாரத்திற்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, கேரட் அல்லது பீட்ருட் போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடிக்க வேண்டும்.
தினமும் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை முகம் கைகால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு இரவில் தூங்கும்போது தேங்காய் எண்ணெய், கற்றாழை, வைட்டமின் E மாத்திரை சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து தூங்கி காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
அதன்பிறகு பசும்பபாலில் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவு பெறும். இதை விட முக்கியமான ஒன்று தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் பொலிவு ஏற்படுவதுடன் மாசு மருக்கள் தவிர்க்கலாம்.