கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு, இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்த மே 8 முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-பாஸ் பெறுவதில் சிக்கல் இருக்குமோ? என சுற்றுலா பயணிகள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு திட்டமிடப்படுகிறதா? TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு!!!
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ‘நீலகிரிக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு, இ-பாஸ் குறித்த அச்சம் தேவையில்லை. வீட்டில் இருந்து உதகைக்கு கிளம்பும் போது கூட, செல்போனில் பதிவு செய்தால் 2 நிமிடங்களில் பாஸ்-ஐ பெற்றுக் கொள்ளலாம்.’ என தெளிவுபடுத்தி உள்ளார்.