தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் காரணமாக வீடுகளில் மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் கட்டணம் உயர்ந்து உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில், ‘அடுத்த மின் கட்டண உயர்வுக்கு, திமுக ஆட்சி திட்டமிட்டு வருகிறது’ என தகவல்கள் பரவி வருகிறது.
IPL 2024: வெற்றிப்பாதையில் RCB.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின் விநியோக மற்றும் பகிர்மானக் கழகம், தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதில் அளித்துள்ளது. அதாவது ‘கடந்த 2022ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மின் கட்டண உயர்வுக்கான புகைப்படத்தை, தற்போது பகிர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.’ என விளக்கமளித்துள்ளனர்.