இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனின் இறுதி போட்டியில் மோதின. அந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், குஜராத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய ஃபார்மின் படி பார்த்தால் சென்னை அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (மே 10) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.