தமிழகத்தில் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்று இருந்தது. இதற்கான முடிவுகள் இன்று (மே 10) காலை வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதிய சுமார் 9 லட்சம் மாணவ மாணவியர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா?? இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணை!!
குறிப்பாக 20,691 பேர் கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் தமிழ் பாடத்தில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், அறிவியலில் 5,104 பேர் மற்றும் சமூக அறிவியலில் 4,428 மாணவ மாணவியர்கள் சென்டம் அடித்து அசத்தி உள்ளதாக கூறியுள்ளனர்.