‘மரணத்துக்கு யார் காரணம் கண்டுபிடியுங்கள்’ – நடிகை சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் புகார்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா (28) திருவான்மியூரை சேர்ந்தவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் விஜெ-வாக நிறைய நிகழ்ச்சிகள் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தின் பொருட்களை தொலைக்காட்சிகளில் விற்பனை செய்வதில் வல்லவர். மேலும் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது சீரியலில் நடிப்பதற்காக சித்ரா சென்னை அருகேயுள்ள நசரேத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். இதையடுத்து தூக்கிட்ட நிலையில் சித்ராவின் உடல் அந்த விடுதி அறையிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டது. சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்தன.

அங்கு அவர் மட்டுமல்ல அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். இதையறிந்த போலீசார் ஹேம்நாத்திடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையில் சித்ராவுக்கும், தனக்கும் 3 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாகவும், சித்ரா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

‘முல்லை ஏண்டி இப்படி பண்ண’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

ஆனால் முறையான ஆவணங்களை காண்பித்தால் மட்டுமே திருமணம் தொடர்பான தகவலை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஹேம்நாத் வெளியே சென்றிருந்ததாகவும் திரும்பி வந்து பார்க்கும்போது கதவு நீண்ட நேரம் திறக்காததால் ஊழியர் கணேசனிடம் மாற்று சாவி வாங்கி கதவை திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரேத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஓட்டல் ஊழியர் கணேசன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக ஓட்டலின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here