ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய வீரர் நடராஜனை பாராட்டி ஒரு பதிவினை பதிவிற்றியுள்ளார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டேவிட் வார்னர் & நடராஜன்:
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது புதிதாக களம் இறங்கி பலரையும் தனது அபாரமான விளையாட்டு திறனால் ஈர்த்தவர் தான், நடராஜன். அவர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். ஒரு தமிழர் பல வருடங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து ஆஸ்திரேலியா மண்ணில் தனது விளையாட்டு வல்லமையால் பலரையும் ஆச்சரியபட வைத்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நடராஜன் ஐபிஎல் போட்டிகளிலும் “சன்ரைசர்ஸ் ஹைதராபாத்” அணிக்காக விளையாடினார். அப்படி அவர் விளையாடும் போது ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் அவரை வெகுவாகவே ஊக்குவித்தார். இப்படியான நிலையில் நடராஜன் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் அசத்தலாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியினை தேடி தந்துள்ளார்.
நாளை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழியும்!!
இதனால் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் எதிர் அணியாக இருந்தாலும் வார்னர் நடராஜனை பாராட்டி தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவினை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது “தோல்வியோ.. வெற்றியோ களத்திலும் வெளியவும் நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம். தொடரை இழந்த போதும் நடராஜனுக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பையன் கிரிக்கெட்டினை மிகவும் நேசிக்கிறார். நெட் பௌலர் முதல் இந்திய அணிக்காக விளையாடுவது வரை அவரது சாதனை அளப்பரியது. வாழ்த்துக்கள் நண்பா!!” இவ்வாறாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது பதிவிற்கு தற்போது லைக்ஸ் அள்ளுகிறது.