‘முல்லை ஏண்டி இப்படி பண்ண’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0
pandian stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்ரா தற்போது தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இது கொலையா? தற்கொலையா?? என சந்தேகம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சித்ரா மரணம்

முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களை மத்தியில் இந்த அளவிற்கு புகழை பெற்றிருப்பவர் சித்ரா. தனது கடின உழைப்பால் முன்னேறியவர் தற்போது இப்படி இறந்து விட்டார் என்பதை கேள்விப்பட்ட மிகவும் வருத்தமாக உள்ளது. இது வெறும் வதந்தியாக இருக்க கூடாதா என்றும் தோன்றுகிறது.

தனது லட்சியப்பாதையை கடந்து வந்துக்கொண்டிருக்கும் சித்ராவின் இந்த முடிவு துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் இது தற்கொலை தானா?? எதற்கு இவரும், கணவரும் தனித்தனியாக தங்க வேண்டும்?? அப்படி என்ன இரண்டு பேருக்கும் நடந்திருக்கும்?? இவ்வாறு பல கேள்விகள் எழுந்துள்ளது.

‘சித்ராவின் முகம் முழுவதும் நகக்கீறல்’ – கொலையா? தற்கொலையா??

vijay tv

ஹேமந்த் தான் இதற்கு காரணமாக இருக்குமோ??? என்று போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் சித்ரா முகத்தில் ஏற்பட்ட காயம் மேலும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இது சந்தேகத்தின் பேரில் சித்ராவை கொடுமைப்படுத்தி இருப்பாரோ?? என்றும் சந்தேகித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா ‘ஏண்டி இப்படி பண்ண’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ஜீவாவும் இதனை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், கைகால்கள் எல்லாம் நடுங்குகிறது, இது வதந்தியாக இருக்க கூடாதா?? 4 நாட்களுக்கு முன்பு கூட அவரை பார்த்தேன்.

எப்பொழுதும் போல சந்தோசமாக இருந்தார். மிகவும் துணிச்சலானவர். இப்படி தற்கொலை செய்யும் அளவிற்கு அவர் கோழை கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும் சித்ராவை உடல் பரிசோதனை செய்யும் இடத்தில் மக்கள் பலரும் கூடியுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஸ்டாலின் கதறி அழும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here