வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.
அடுத்த நாட்களுக்கு லேசான மழை:
வடகிழக்கு பருவமழை காற்று காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டத்தை மதிக்க மாட்டீர்களா? பீலா ராஜேஷுக்கு நீதிபதிகள் கண்டனம்!!
நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, நீலகிரி, கோவை பகுதிகளில் 5 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, திருச்செந்தூர், சோலையூர், காரியாபட்டி சோழிங்கநல்லூர் பகுதிகளில் 4 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, ஆத்தூர், கடலூர் பகுதிகளில் 3 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.