அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் பட்டேல் அறிவித்துள்ளார். உள்நாட்டு போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திவ் பட்டேல்:
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போது தான் கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகமானது. அப்போதில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் என்றதும் அனைவர் மத்தியிலும் ஒரு தாக்கத்தை இன்று வரை ஏற்படுத்தி வருகின்றது. என்ன தான் சுதந்திரம் அடைந்ததற்கு பின் இந்தியா அணி விளையாடினாலும் கவாஸ்கர், விஸ்வநாத், கபில் தேவ் போன்றோர் அணியில் இணைந்ததற்கு பிறகு தான் இந்திய அணி சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. அப்போது முதல் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்படி இந்திய அணியில் தனது 17 வயதில் இணைந்தவர் தான் பார்த்திவ் பட்டேல்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவரால் அவ்வளவு சிறப்பாக ரன் குவிக்க முடியாத காரணத்தால் அவர் இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். அதே போல் அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. ஆப்கனில், அடுத்ததாக 2008, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றார். ஆனாலும், அவரால் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னை நிரூபிக்க முடியவில்லை.
உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் – நிர்மலா சீதாராமன் 41வது இடம்!!
தற்போது அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 25 டெஸ்ட் போட்டிகளில் 934 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல் அவர் விளையாடிய 38 ஒரு நாள் போட்டிகளில் 736 ரன்கள் எடுத்துள்ளார்.