இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகள் நடத்தலாம் என தேசிய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.
கல்வி பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மாதக்கணக்கில் பூட்டப்பட்டு உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறாமலே அடுத்த கல்வியாண்டு தொடங்க உள்ளது. இதனால் கல்லூரிகளில் ஊரடங்கு முடிந்து தேர்வு தேதிகள், மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே வழிமுறைகள் வெளியிடப்பட்டு விட்டன.
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு..!
80 சதவீத பாடங்களுக்கு மட்டும் தேர்வு..? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய முடிவு..!
தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பி உள்ளது. அதில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகளை நடத்தலாம் என்றும் ஒரு நாள் விட்டு ஒருநாள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம் என தேசிய கவுன்சில் தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |