80 சதவீத பாடங்களுக்கு மட்டும் தேர்வு..? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய முடிவு..!

0
Anna University
Anna University

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் ஒரு மாதத்திற்கும் மேலாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் கல்லூரிகளில் பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் நடத்தி முடிக்கப்பட்ட 80% பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாமா? என அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.

தேர்வு நடைமுறை:

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு கல்லூரிகளுக்கு தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி அட்டவணையையும் வெளியிட்டு உள்ளது. இதனால் தேர்வு நடத்தும் நடைமுறைகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்தினாலும் அதில் எந்த அளவிற்கு மாணவர்களின் பங்களிப்பு இருக்கும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதால் அந்த முறையில் தேர்வு நடைபெறுவது சந்தேகமே என கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கிற்கு முன்பு நடத்தி முடிக்கப்பட்ட 80 சதவீத பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

50 நாட்கள் தேர்வு:

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தேர்வுகள் பொதுவாக 30 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். ஆனால் இந்த முறை கொரோனா பரவலால் சமூக இடைவெளி போன்ற காரணங்களால் தேர்வை நடத்தி முடிக்க 50 நாட்கள் வரை தேவைப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 12 நாட்களுக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த 3 வாரத்தில் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜூலை மாதத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக்கழக மானியக்குழு அறிவுரை வழங்கி உள்ள நிலையில் கொரோனவால் மேற்கொள்ளப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைகளை பொறுத்தே தேர்வு அட்டவணை வெளியாகும் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here