தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 2 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வு வயது அதிகரிப்பு:
80 சதவீத பாடங்களுக்கு மட்டும் தேர்வு..? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய முடிவு..!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 58 ஆக இருந்த ஓய்வு வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருத்தும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |