எக்ஸ்ட்ராக்சன் 2ம் பாகம் விரைவில் வெளியாகும் – ஜோ ருஸ்ஸோ உறுதி..!

0

நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்த எக்ஸ்ட்ராக்சன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளியாகும் எனவும் அதற்கான கதை தயாராகி வருவதாக ஜோ ருஸ்ஸோ தெரிவித்து உள்ளார்.

கிறிஸ் ஹெம்ஸஒர்த் படம்:

ஹாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸஒர்த். இவர் புகழ்பெற்ற மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் ‘தோர்’ உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து பிரபலமடைந்தவர். உலகில் அதிகம் சம்பளம் பெரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவரது நடிப்பில் இந்தியா, பங்களாதேஷ் நாடுகளை மையமாக கொண்ட கதைக்களத்தில் ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்‌ஷ் ஜைஸ்வால் போன்ற இந்திய நடிகர்களும் இணைந்து உருவாகி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் தான் எக்ஸ்ட்ராக்சன்.

இரண்டாம் பாகம் உருவாகும்:

எக்ஸ்ட்ராக்சன் திரைப்படம் பல்வேறு வித விமர்சனங்களை பெற்றாலும் நெட்பிலிக்ஸ் தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படத்தில் ஒன்றாக மாறி உள்ளது. இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜோ ருஸ்ஸோ இதன் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த படத்தின் 2ம் பாகத்தின் கதையை முழுவதும் தயார் செய்து விட்டு கிறிஸ் ஹெம்ஸஒர்த் பார்வைக்கு கொண்டு செல்வேன் என கூறியுள்ளார். மேலும் 2ம் பாகம் முன்னோக்கிய கதையா அல்லது பின்னோக்கிய கதையா என்ற முடிவை பார்வையாளர்களிடம் விட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here