மாஸ்க் அணிந்தால் பேருந்தில் அனுமதி, 50% பயணிகள் – போக்குவரத்துத் துறை விதிகள் வெளியீடு..!

0

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேருந்து பயண விதிகள்:

தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள விபரங்கள்,

  • ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்க வேண்டும்.
  • டிரைவர், கண்டக்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
  • அவர்களுக்கு மாஸ்க், கையுரை, சானிடைசர் வழங்க வேண்டும். பஸ்களில், இருக்கைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
  • பேருந்துகளில் நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி வேண்டும்.
  • பயணிகள் இருக்கையில் அமர குறியீடு (மார்க்) செய்ய வேண்டும்.
  • மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும். வரிசையில் நின்று பஸ்களில் ஏற வேண்டும்.
  • கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். முடிந்த வரை மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.
  • பேருந்துகளில் ஜன்னல்கள் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். பஸ் நிலையத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.

உள்ளிட்ட விதிமுறைகளை ஊரடங்கு முடிந்து பேருந்துகளை இயக்கும் பொழுது பின்பற்ற வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here