தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தபின் அரசுப் பேருந்துகளை இயக்குவது குறித்து 8 போக்குவரத்து கழகங்களுக்கு போக்குவரத்து செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில் 50% பயணிகளை மட்டும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பேருந்து பயண விதிகள்:
தமிழகத்தில் பேருந்து பயணங்களை தொடங்குவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள விபரங்கள்,
- ஊரடங்கு முடிந்த பின் 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயங்க வேண்டும்.
- டிரைவர், கண்டக்டர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.
- அவர்களுக்கு மாஸ்க், கையுரை, சானிடைசர் வழங்க வேண்டும். பஸ்களில், இருக்கைகளில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
- பேருந்துகளில் நின்று கொண்டே, பயணம் செய்பவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி வேண்டும்.
- பயணிகள் இருக்கையில் அமர குறியீடு (மார்க்) செய்ய வேண்டும்.
- மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பஸ்களில் அனுமதிக்க வேண்டும். வரிசையில் நின்று பஸ்களில் ஏற வேண்டும்.
- கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். முடிந்த வரை மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம்.
- பேருந்துகளில் ஜன்னல்கள் கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும். பஸ் நிலையத்தில் 5 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும்.
உள்ளிட்ட விதிமுறைகளை ஊரடங்கு முடிந்து பேருந்துகளை இயக்கும் பொழுது பின்பற்ற வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |