தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்ட கடைகளில் மதுபிரியர்கள் வயது வாரியாக வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இதனை எதிர்த்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்.
கருப்புச் சின்னம்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை எதிர்த்து அரசை கண்டிக்கும் வகையில் மற்றும் போதிய நிதியுதவி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மே 7 ஒரு நாள் மட்டும் காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு மேல் மிகாமல் 15 நிமிடங்கள் கருப்புச் சின்னம் அணிந்து ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்’ என்று கோஷமிட்டு களைய வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
அதன்படி இன்று காலை முக ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கருப்புச்சின்னம் அணிந்து கொடி ஏந்தி, பதாகைகளுடன் அதிமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முகக்கவசம் அணிந்தும் தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |