தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை – டாப் 5 மாவட்டங்கள்..!

0

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், குடை, சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு வித விதிமுறைகள் விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மது விற்பனையில் தமிழகம் புது உச்சத்தை தொட்டது.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்ச ஆரம்பித்ததால் பலர் கைது செய்யப்பட்டனர். மே 3 முதல் அமலுக்கு வந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால் பல மாநிலங்களில் மது விற்பனை தொடங்கப்பட்டது. ஒரு நாளில் 50 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில் மே 7 முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு, சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்கள், வரிசை முறை என மது விற்பனை ஜோராக நடைபெற்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. தமிழகத்தில் மதுபானங்களின் விலையும் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருந்த நிலையிலும் இந்த அளவிற்கு விற்பனை நடைபெற்று உள்ளது.

டாப் 5 மாவட்டங்கள்:

  1. மதுரை – ரூ. 37 கோடி
  2. சென்னை புறநகர் பகுதிகள் – ரூ. 34 கோடி
  3. கோவை – ரூ. 34 கோடி
  4. சேலம் – ரூ. 33 கோடி
  5. திருச்சி – ரூ. 32 கோடி
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here