பாடகர் எஸ்.பி.பி. நன்றாக குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனரும் ஆன பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர் குழுவால் தெரிவிக்கப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இதனால், அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். பலரும் அவருக்காக பிராத்தனை செய்வதாக கூறி வந்தனர். அவரது நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளரும் ஆன இளையராஜா சில தினங்களுக்கு முன் வீடியோ வாயிலாக, தான் அவரது நலனுக்காக பிராத்தனை செய்வதாக கூறியிருந்தார்.
அவர் மீண்டும் நலமாக திரும்பி வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் என்று வீடியோ வாயிலாக அவரும் கூறியிருந்தார்.
பாரதிராஜா உருக்கம்:
அதே போல் அவரது நெருங்கிய நண்பர் இயக்குனர் பாரதிராஜா வீடியோ வாயிலாக தனது பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “டேய் பாலு எழுந்து வாடா..வாடா அப்படின்ற இந்த உரிமையா நீ கொடுத்து 50 ஆண்டுகாலம் ஆகுது. எனக்கும் உனக்குமான உறவு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி பட்ட உறவு.
பழைய தங்கத்தை விற்கும் போது ஜி.எஸ்.டி வரி – நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு!!
Get Well Soon For #SPBalasubramanyam pic.twitter.com/zO0bRU1Wze
— Bharathiraja (@offBharathiraja) August 18, 2020
பள்ளி நாட்களில் கூட நான் என் நண்பர்களுடன் அவ்ளவாக பழகியதில்லை. அனால், நான் உன்னுடன் நெருங்கி பழகி உள்ளேன். பாலு, நான் மட்டும் அல்ல உலகத்தில் உள்ள உன் ரசிகர்கள் அனைவரும் கண்ணீர் வடிக்கின்றனர்.
எளிய முறையில் வீட்டிலேயே Capacino காபி – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!
இரண்டு நாட்களாக நானும் கண்ணீர் வடித்து கொண்டு இருக்கிறேன். நீ மறுபடியும் வந்து பாட்டு பாட வேண்டும். உலகில் நீர், நிலம், காற்று, தீ இதுவெல்லாம் எப்படி உண்மையோ அது போல் நீயும் உண்மை. நீ வர வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அவர் இந்த வீடியோ பதிவில், அவருக்கும் எஸ்.பி.பிக்கும் நடந்த இனிமையாக நாட்களை ரசிகர்களுக்கு பகிர்ந்தார்.