தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக தொடர்ந்து 15வது நாளாக 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கினாலும் மறுபுறம் உயிரிழப்புகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்து உள்ளது.
ஒரே நாளில் 121 பேர் உயிரிழந்த காரணத்தால், பலி எண்ணிக்கை 6,007 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 5,850 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,89,787 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,182 பேர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்கள். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,19,059 ஆக உயர்ந்து உள்ளது.