அன்றாடம் நாம் வெளியே சென்று வருவதால் தூசிகள் படிந்து முகம் பொலிவின்றி காணப்படுகிறது. மாசுமரு இல்லாத சருமத்தை பெற சில வழிமுறைகள் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, ரோஜா பூ, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு , ஆரஞ்சு பல தோல்.
செய்முறை
ஆரஞ்சு பழ தோலை 2 நாட்கள் வெயிலில் காயவைத்து கொள்ள வேண்டும். அதன்பின் ஆவாரம்பூ மற்றும் ரோஜா இதழ்களை 1 நாள் முழுவதும் நிழலில் காய வைத்து எடுத்து கொள்ளவும் அதனுடன் பாசிப்பருப்பு மற்றும் கடலை பருப்பு கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு சேர்த்து ஆரஞ்சு தோலையும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
சோப்புக்கு பதிலாக இதையே பயன்படுத்திக்கொள்ளலாம். இது சருமத்தின் உள்ளே சென்று அழுக்குகளை வெளியேற்ற உதவும். மேலும் ரோஜா பூ மற்றும் ஆவாரம்பூ சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும். எண்ணெய் பலகாரங்களை குறைப்பதால் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.