தனம் கீழே விழுந்ததற்கு முல்லை மீது பழி சொல்லும் மூர்த்தி – அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் தனத்தை பார்க்க வரும் அவர் அம்மா, தனத்தை யாரும் கவனிக்கவில்லை என குற்றம் கூறுகிறார். முல்லை வீட்டை சரியாக கவனித்து கொள்ளவில்லை என வருத்தப்படுகிறார் மூர்த்தி.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் தனம் சூப்பர் மார்க்கெட் திறந்துட்டாங்களா என கேட்கிறார். உனக்கே முடியாமல் இருக்கு, அதுவா முக்கியம் என லட்சுமி பதில் கூறுகிறார். கண்ணனை கடைக்கு போக சொல்லி மூர்த்தி கூறும் போது நான் காலேஜுக்கு போகணும் என கூறிவிட்டு புறப்படுகிறார் கண்ணன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூர்த்தியை வீட்டில் தனத்துடன் இருக்க சொல்லி கூறுகிறார் கதிர். பின்பு நடந்த சம்பவத்தை நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறார் தனம். சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு புறப்படும் ஜீவா, கதிருக்கு போன் செய்து பேசுகிறார். தனம் வீட்டிலிருப்பதை தெரிந்து கொண்டதும், கடையில் யாரும் இல்லை அதனால் கடைக்கு கிளம்புகிறேன் என மீனாவிடம் கூறுகிறார்.

பக்கத்து கடைக்காரருடன் ஏற்பட்ட பிரச்சனையினால் போலீஸ் ஸ்டேஷன் வரை போகவேண்டும் என கூறி ஜனார்த்தனன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். வீட்டுக்கும் போக முடியாமல், கடைக்கும் போக முடியாமல் முழித்து கொண்டிருக்கிறார் ஜீவா. காலேஜுக்கு செல்லும் கண்ணனை நண்பர்கள் கலாய்க்கிறார்கள். காலேஜில் ஐஸ்வர்யாவை பார்க்க வந்த கண்ணன், தனம் கீழே விழுந்ததை கூறுகிறார்.

பள்ளி மாணவர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார் – சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

தனத்தை பற்றி விசாரித்த ஐஸ்வர்யா நீ சாப்டியா என கண்ணனை கேட்க, இன்னும் இல்லை என கண்ணன் கூறுகிறார். ஐஸ்வர்யா கொண்டு வந்த சாப்பாடை இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஐஸ் நீ சிரிப்பது அழகாக இருக்கிறது என கண்ணன் கூறுகையில், கண்ணனின் நண்பர்கள் வந்து கலாய்த்துவிட்டு செல்கின்றனர்.

படுத்து ரெஸ்ட் எடு தனம் என்று மூர்த்தி கூற இப்படி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறது தான் நல்லா இருக்கு என தனம் கூறுகிறார். தனத்தை பார்க்க வீட்டுக்கு வரும் ஜெகா மற்றும் அவரது அம்மா தனத்தை நினைத்து வருந்துகின்றனர். தனத்தை வீட்டிற்கு வர சொல்லி அவளது அம்மா கூப்பிட வரவில்லை என மறுக்கிறார் தனம்.

பின்னர் தனம் கீழே விழுந்த இடத்தை பார்த்து கொண்டிருக்கும் மூர்த்தி, முல்லையை கூப்பிடுகிறார். அப்போது அங்கு வரும் கதிரிடம் பேசிக்கொண்டிருக்கையில், முல்லை வருகிறார். சோப்பு தண்ணி கண்ட இடத்துல இருந்தா, யாராவது வழுக்கி விழ தானே செய்வாங்க என கூறி முல்லையை கோபித்து கொள்கிறார் மூர்த்தி. இத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here