ரோஜா சீரியலிலிருந்து விலகிய முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

சன் தொலைக்காட்சியின் ‘ரோஜா’ தொடரின் கதாசிரியராக இருந்தவர் எழுத்தாளர் பத்மாவதி, அந்த தொடரிலிருந்து விலகப்போவதாகவும், அவருக்கு பதிலாக வேறொருவர் கதை எழுதப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோஜா சீரியல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் ‘ரோஜா’. இந்த தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை வடிவுக்கரசி, பிரியங்கா நல்காரி, சிப்பு, ராஜேஷ், வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனாதையான ஏழை பெண் ரோஜா சந்தர்ப்ப சூழ்நிலையினால் பணக்காரரான அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு வருட கான்ட்ராக்ட் ஒப்பந்தத்தில் அர்ஜுன் வீட்டுக்கு வரும் ரோஜாவுக்கும் அர்ஜூனுக்கும் காலப்போக்கில் காதல் ஏற்படுகிறது. அந்த வீட்டில் அனு என்ற பெயரில் இருக்கும் பிரியா, அர்ஜுனின் தம்பியை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

அர்ஜுனின் தம்பியை திருமணம் செய்வதால் சொத்துக்களை அனுபவிக்கலாம் எனவும் திட்டமிடுகிறார் அனு. அனுவின் திட்டத்தை அறிந்த ரோஜாவும், அர்ஜுனும் அவர்களது குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்கள். இப்படி தான் ரோஜா தொடரின் கதைக்களம் நகர்ந்து வந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் கதாசிரியராக பணியாற்றி வந்த பத்மாவதி என்பவர் திடீரெனெ அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குரு சம்பத் என்பவர் இந்த சீரியலுக்கு கதை எழுத உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கதையில் இனி என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதே ரோஜா சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here