தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் தற்போது சிறப்பு பறக்கும் படையை நியமித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
தமிழகம்:
கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் மக்கள் அனைவரும் அலட்சியமாக மாஸ் அணிவதை நிறுத்தி, பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக திரிந்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும். இந்நிலையில் தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க கூடாது என்ற விழிப்புணர்வுடன் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணியும் பழக்கம் தற்போது பலரிடம் இல்லை. இதுபோல் முகக்கவசம் இல்லாமல் திரிபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இவர்களை கவனிக்கும் வகையில் சிறப்பு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தற்போது மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதனை மக்கள் அலட்சியப்படுத்தாமல் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை என்பதை மக்கள் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.