பல திருப்பங்களுடன் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் இந்த வாரம் பல ட்விஸ்ட்  காத்திருக்கிறது. இதனால் யாரடி நீ மோகினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

யாரடி நீ மோகினி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திகில் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது ‘யாரடி நீ மோகினி’. இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீ குமார், நடிகை சைத்ரா ரெட்டி, நக்ஷத்ரா ஆகியோருடன் பாத்திமா பாபு, அரவிந்த், ஷாலினி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் வாரம் ஒருமுறையாவது திருப்பங்கள் நிறைந்ததாக காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘யாரடி நீ மோகினி’ தொடரில் முத்தரசு மனைவி சித்ரா இறந்த பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்ளுகிறார் முத்தரசு. முன்னதாக ஸ்வேதாவை முத்தரசுக்கு திருமணம் செய்து வைக்க சதி திட்டம் தீட்டுகிறார் நீலாம்பரி.

ரோஜா சீரியலிலிருந்து விலகிய முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நீலாம்பரியின் சூழ்ச்சி தெரியாத முத்தரசு நீலாம்பரியை நம்புகிறார். இந்நிலையில் முத்தரசுவையும், வெண்ணிலாவையும் பிரிக்க ஸ்வேதா திட்டம் போடுகிறார். ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஸ்வேதாவின் சூழ்ச்சியால், ஸ்வேதாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார் முத்தரசு.

தொடர்ந்து முத்தரசுவிற்கும் ஸ்வேதாவிற்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த தொடரில் பல திருப்பங்கள் நடக்க உள்ளது. திருமண மேடையில் தாலி கட்டும் சமயத்தில், முத்தரசு ஸ்வேதாவுக்கு தாலி கட்டுவதற்கு பதிலாக வெண்ணிலாவுக்கு தாலி கட்டி விடுகிறார். இந்த தகவலை ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் ‘யாரடி நீ மோகினி’ சீரியலின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here