விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கான காதல் காட்சிகள் வந்து விட்டன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்”
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதில் குறிப்பிடும்படியான சீரியல் என்று பார்த்தால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். காரணம் அந்த சீரியலில் நாம் மறந்து போன கூட்டு குடும்ப வழக்கத்தை அழகாக எடுத்துரைத்திருப்பர். அந்த சீரியலின் பிளஸ் பாயிண்ட் கூட்டு குடும்பம் என்றால் அன்பு மட்டும் தான் இருக்கும் என்று கனவு பாணியில் இல்லாமல், யதார்த்தமாக குடும்பங்களில் நடைபெறும் சண்டை, மனஸ்தாபம் என்று அனைத்தையும் காட்டி இருப்பர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த சீரியலில் அனைவருக்கும் பிடித்த ஜோடி என்றால் அது கதிர் மற்றும் முல்லை தான். ஆரம்பத்தில் கதிரின் அண்ணனான ஜீவாவை விரும்பும் முல்லை பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கதிரை திருமணம் செய்து கொள்வார். இதனால் இருவருக்குமே பிடிக்காத திருமணம் தான் இது. ஆனால், கதிரின் குணநலன்களை அறியும் முல்லைக்கு அவர் மீது காதல் வருகிறது. அதே போல் குடும்பத்திற்காக பல விஷயங்களை தியாகம் செய்யும் முல்லையின் மீதும் கதிருக்கு காதல் வருகிறது.
காதல் காட்சிகள்:
இவர்களது அன்பு தொடர்ந்து கண்ணாம்பூச்சி ஆட்டம் போல் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. ஆனால், காதலை தான் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைக்க முடியாதே. அதனால், குடும்பத்தினர் இருவருக்குமான அன்பினை புரிந்து கொள்கின்றனர்.
பின், அவர்களை சேர்க்கும் முயற்சியிலும் இறங்குகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்படுகிறது.
முதலில் வெட்கம் அடையும் இருவரும் பின் தங்களது அன்பினை ஒத்து கொள்கின்றனர்.
முல்லை அப்போது எதையோ கண்டு பயப்புடுவதால் கதிர் அவரை ஆதரவாக பிடித்து கொள்கிறார். இப்படியாக இருப்பதால் கதிர் மற்றும் முல்லை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.