தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தும் தமிழக அரசுக்கும் ஏதேனும் பிரச்னையையோ என்ற நினைப்பிற்கு எதிராக அப்படி எதுவும் இல்லை என்றும் தமிழக அரசுக்கும் தங்களுக்கும் எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
அரியர் சர்ச்சை:
தமிழக அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்று அறிவித்தது. இதனால் அனைத்து கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதனால் அண்ணா பல்கலைக்கழத்திற்கும், தமிழக அரசிற்கும் ஏதோ பிரச்னை என்று கூறப்பட்டது. இதற்கு தற்போது துணைவேந்தர் சுரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
எந்த போரும் இல்லை:
அவர் கூறியதாவது “உயர் நிலை சிறப்பு தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தால் இன்னும் நல்ல வருவாய் கிடைக்கும். அந்த வருவாயினை பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கட்டமைப்பு, பயிற்சிகள், அறிவியல் படிப்புகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை வாங்கப்படும். இந்த உயர்நிலை சிறப்பு தகுதி நிர்வாகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது”
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு – இருவருக்கு பகிர்ந்தளிக்க முடிவு!!
“பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளதுறையின் நோக்கம் ஆகும். அதே போல் தனிப்பட்ட முறையில் தமிழக அரசுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த பிரச்னையும் இல்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றால் மட்டுமே உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்போம் என மத்திய அரசிடம் கோரினோம், அவ்வளவு தான். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.