Friday, May 17, 2024

“நிவர்” புயலை அடுத்து மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

“நிவர்” புயல் உருவாகி தற்போது பெரும் ஆபத்தினை சந்தித்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல்:

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை நேற்று வங்க கடலில் உருவான “நிவர்” புயல் கடந்துள்ளது. வங்க கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, பின் மண்டலாக வலுப்பெற்று புயலாக மாறியது. “நிவர்” புயல் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை கடக்க இருந்தது. அதே போல் இன்று அதிகாலை 2 மணி அளவில் தமிழகத்தில் கடற்கரை பகுதிகளை கடந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த புயல் வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விட்டு தான் சென்றது. அரசு சிறப்பாக செயல்பட்டதால் புயல் வரும் போது மக்கள் பாதுகாக்கப்பட்டனர். ஆனாலும், சென்னையின் பல பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியாக புயல் வந்து ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், அது வரும் 29 ஆம் தேதி பெரும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக் கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழை பெய்யும்.

மும்பை தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு – ட்விட்டரில் ட்ரெண்டிங்!!

அதனால், தமிழகத்தில் அடுத்து சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விரைவாக தகவல் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -