தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோ மூலமாக பிரபலம் அடைந்தவர், நாஞ்சில் விஜயன். அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரௌடிகள் தன் வீட்டில் புகுந்து தன்னை தாக்கி கொலை செய்ய முயற்சித்தாக கூறியுள்ளார். தான் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
விஜய் டிவி பிரபலம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு??” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர், நாஞ்சில் விஜயன். அவரது யதார்த்தமான நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதனால், அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலமான வனிதா விஜயகுமாரை, சூரியாதேவி என்ற பெண்ணுடன் சேர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததால் வனிதா விஜயகுமார் அளித்த புகாரின் பெயரில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், சில நாட்களில் அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக வனிதா விஜயகுமார் பேட்டியளித்தார். ஆனால், இதனை நாஞ்சில் விஜயன் மறுத்துள்ளார். இப்படியாக சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட இவர், கொஞ்ச நாட்கள் காணாமல் போயிருந்தார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
தற்போது மீண்டும் ஒரு பரபரப்பு செய்தியினை பதிவிட்டுள்ளார். நேற்று இரவு சில ரௌடிகள் தன்னை தாக்க வந்ததாகவும், அவர்களில் சிலர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு, சூரியாதேவி தான் காரணம் என்றும் கூறியுள்ளார். சூரியாதேவி ரௌடிகளுடன் தன் வீட்டில் புகுந்ததாக அவர் கூறியுள்ளனர்.
முடி உதிர்தலை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா?? இது மட்டும் போதும்!!
அவர் காயம் அடைந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். அதில் போலீசார் அவரது வீட்டின் உள்ளே மற்றும் வெளியே இருப்பது போலவும் உள்ளது.
கூடுதலாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போலவும் உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சிலர், நீங்களும் அவரும் தான் நண்பர்கள் ஆச்சே?? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.