சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி பொது முடக்கம் முடியுள்ளதால், இவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது.
பொது முடக்கம்:
தமிழகத்தில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பொது முடக்கத்தில் திரையரங்குகள், கடற்கரை மற்றும் கடற்கரையில் உள்ள கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பாக வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதிகள் வீனித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
கடந்த மாதம் 5 ஆம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் திறக்க கோரியது, மீன் சந்தை திறப்பது, மக்கள் பார்வைக்கு திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக சென்னை மாநகராட்சி நவம்பர் 11 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே போல் கூடுதலாக நவம்பர் 1 ஆம் தேதி மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்புள்ளதா?? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடற்கரையை தூய்மையானதாக மாற்ற வேண்டும்:
இதை தொடர்ந்து சென்னை மாவட்ட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சென்னை காவல் ஆணையாளர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டதாவது “விழாக்காலம் தொடங்கப்படவுள்ளதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரை மக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது. கடற்கரையில் 65 ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன”
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் தீபாவளி ரொக்கப்பரிசு?? எதிர்பார்ப்பில் மக்கள்!!
“இனி, ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், கண்காணிக்கவும் தவறுவதில்லை. பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரையினை தூய்மையானதாக மாற்றவும் வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். மெரினா கடற்கரை வரும் நவம்பர் மாதம் திறக்கப்படுமா?? என்ற எதிர்பார்ப்பில் சென்னைவாசிகள் உள்ளனர்.