தமிழக மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழக அரசு 2000 ரூபாய் ரொக்கமாக கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பொது முடக்கம்:
கொரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவர்களது அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகையாக 2000 ரூபாய் ரொக்கமாக வழங்க முடிவு எடுத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தீவிரமான ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
ஆண்டுதோறும் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். தீபாவளி மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்கள் கொரோனா கால பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து எப்போதும் வழங்கப்படும் தொகையினை விட கூடுதலாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மக்களின் நலன் கருதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது.
தேர்தலுக்காகவா??
ஆனால், எதிர்க்கட்சியான திமுக மக்களுக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. அரசு சார்பில் மக்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு பின் ரேஷன் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ரஷீத் கான் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?? குழப்பத்தை ஏற்படுத்திய கூகிள்!!
தற்போது தீபாவளி பண்டிகைக்காக அரசு 2000 ரூபாய் ரொக்கமாக வழங்க இருக்கும் முடிவு மே மாதம் நடக்க உள்ள தேர்தலை கருத்தில் கொண்டு தரப்பட உள்ளதா?? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிவாரண தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.