அசைவத்தில் சிக்கன் நம் அனைவர்க்கும் பிடித்தமான உணவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதன் சுவை நம்மை கட்டிப்போட்டுள்ளது. சிக்கனில் ஈசியாக பல விதமான உணவுகளை செய்து முடிக்கலாம். ஏனெனில் அது எளிதில் சமைக்க கூடிய உணவு. இப்பொழுது சிக்கனை வைத்து சுவையான பாட்டியாலா சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கி
தயிர்
இஞ்சி
பூண்டு
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு
பட்டை, ஏலக்காய்
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
குடைமிளகாய் – 2
முந்திரி
செய்முறை
முதலில் சிக்கனில் தயிர், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் பாதியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அடுப்பில் மீதமுள்ள வெங்காயம், தக்காளி கலவையில் சிக்கனை சேர்த்து வதக்கவும். பிறகு அதனை மூடி வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் சதுரமாக நறுக்கிய பெரிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் நாம் எடுத்து வைத்த தக்காளி வெங்காயம் கலவையை அதில் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கிளறவும். அதுவும் நன்கு வதங்கியதும், கலவையை சிக்கனில் சேர்த்து கிளறவும். அதில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கினால் சுவையான பாட்டியாலா சிக்கன் தயார்.