கடன் பிரச்சனையை முழுமையாக தீர்க்க – ருணஹர கணபதி வழிபாடு!!

0
runuraga vinayagar
runuraga vinayagar

நமது வாழ்க்கையில் மிச்சம் வைக்க கூடாத மூன்று விஷயங்கள் கடன், பகை மற்றும் நெருப்பு என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இந்த மூன்று விஷயங்களை மிச்சம் வைத்தால் நமது வாழ்க்கையையே அழித்து விடும். இதில் மிக கொடுமையான பாதிப்பு கடன் பிரச்சனையே. இதனை மிச்சம் வைத்தால் பெரிய நஷ்டத்தையே ஏற்படுத்தி விடும்.

கடன் பிரச்சனை

பகையை மிச்சம் வைத்தால் அது அடுத்த தலைமுறைக்கு கூட பாதிப்பை எற்படுத்தி விடும். நெருப்பை மிச்சம் வைத்தால் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் கடன் பிரச்சனை குடும்பத்தையே சீரழித்து விடும். 1000 ரூபாய் தானே என்று நினைத்தால் அது வட்டிக்கு மேல் வட்டி ஏறி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் நாமே அசால்ட்டாக கடனை வாங்கி வட்டியில் சிக்கி கொள்கிறோம்.

runuraga vinayagar
runuraga vinayagar

இதனால் சம்பாதித்த அனைத்தையும் வட்டி கட்டியே செலவழிக்கிறோம். இந்த கடன் பிரசியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் உள்ளன. அதாவது விநாயகரை மந்திரத்தை சொல்லி 48 நாட்கள் வழிபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை தீரும். அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்து ருணஹர கணபதியை வழிபட்டு வர வேண்டும். ‘ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நமஹ பட்’ இந்த மந்திரத்தை 108 முதல் 1008 வரை உங்களால் முடிந்த அளவிற்கு உச்சரித்து வழிபட வேண்டும்.

runaganapathi
runaganapathi

இதனை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக கழுத்தை நெறிக்கும் பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆகிவிடும். மேலும் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை பெண்கள் 48 நாட்கள் செய்ய முடியவில்லை என்றால் இடையில் 5 நாட்கள் விட்டு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இதனால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here